பத்தனம்திட்டா, ஜன.13- கூடுதல் கொள்கைத் தெளிவுடன் ஏகபோகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு தயாராக வேண்டிய தருணம் இது என சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எளமரம் கரீம் தெரிவித்தார்.
சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர். டி.எம்.தாமஸ் ஐசக் எழுதிய ‘தனியார்மயமாக்கலும் ஷிங்கிடி கேபிடலிசமும்’ என்ற நூலை வெளி யிட்டு அவர் மேலும் பேசியதாவது: ஏகாதிபத்தியம், ஏகபோகம் மற்றும் பாசிசத்தின் செல்வாக்கு சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியுள்ளது. பல்வேறு கலை வடிவங்கள், சித்திரங்கள், திரைப் படங்கள் மூலம் இதற்கான அனை த்து வழிகளையும் பயன்படுத்து கிறார்கள். இவர்கள் சந்தைக்கு ஏற்ற வாறு உத்திகளை உருவாக்கு கிறார்கள்.
தற்போதைய ஒன்றிய அரசு தனியார்மயத்தையும் தாராள மயத்தையும் ஊக்குவித்து வரு கிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. மக்கள் திரள்வு மூலம் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும். கருத் தியல் ரீதியாக அனைவரும் தெளி வடைவது அவசியம் என்றார். வெறும் போராட்டம் மட்டு மல்லாமல், கருத்துத் தெளிவுடன் அரசியல் மயமாக்கலுக்கு ஒவ்வொரு தொழிலாளியும் தயாராக இருக்க வேண்டும் என டி.எம்.தாமஸ் ஐசக் கூறினார்.
நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஹரிதாஸ் தலைமை வகித்தார். என்ஜிஓ யூனியன் மாநில பொதுச் செயலாளர் எம்.ஏ.அஜித் குமார் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.