states

img

வேறு கட்சியில் இருந்து விலகி சிபிஎம்மில் இணைந்த 116 குடும்பங்கள்

பத்தனம்திட்டை, மார்ச் 4- மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெறுப்பு மற்றும் வகுப்புவாத கும்பல்களின் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்டு, ஆயி ரக்கணக்கானோர் குடும்பங்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதர வாக அணி அணியாக வருகிறார்கள்.

பத்தனம்திட்டையில் மார்ச் 3 ஞாயி றன்று, 116 குடும்பங்கள் காங்கிரஸ் -பாஜக உறவுகளை விட்டு விலகி, சிபிஐ-எம் உடன் இணைந்து செயல்பட முடிவு செய்தன. மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதி கரித்து வருவதை இது வெளிப்படுத்தி உள்ளது. எல்.டி.எப் அரசின் வளர்ச்சி  சாதனைகள் மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு சிபிஎம்மில் இணைந்த குடும்பங்கள் சிறந்த உதாரணம்.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள்கூட சிபிஎம்-க்கு வந்தனர். கொந்நியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணிபுரியும் 52 குடும்பங்களும், ஏரத் சூரக்கோட்டில் 49 குடும்பங்களும், மந்துகாவில் 15  குடும்பங்களும் வலதுசாரி தொடர்பை கைவிட்டு செங்கொடி ஏந்தினர். கொந்நி யில் பாஜக மற்றும் காங்கிரஸில் பணி யாற்றிய 52 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூர் கமிட்டி தலைமையில் கட்சிக்கு வந்த புதியவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பையனமண்ணில் நடைபெற்ற கூட்டத்தை மாவட்டச் செய லர் கே.பி.உதயபானு துவக்கி வைத்தார். அடூர் ஏரத் சூரக்கோட்டில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர பல குடும்பங்கள் முன்வந்துள் ளன. காங்கிரஸில் ஊராட்சி ஒன்றிய வேட்பாளராக இருந்த சுபாதேவி, 16 ஆவது வார்டு பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட சோபனா பாலன், சூரக் கோடு ஹரிஸ்ரீ ராஜேஷ் உட்பட 49 குடு ம்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர்.