பாம்பு காதலன் என்று அழைக்கப்படும் வா வா சுரேஷ் பாம்பால் கடிபட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், தற்போது அவர் மீண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ். இவர் பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சிறிய பாம்புகள் முதல் கருநாகப்பாம்பு உள்ளிட்ட அரியவகை பாம்புகளை பிடிப்பதோடு மட்டுமல்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்ல பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றபோது வாவா சுரேஷை பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாவா சுரேஷ் சுயநினைவை இழந்த நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலனாக கோமாவில் இருந்து மீண்டுள்ளதாகவும், சில வார்த்தைகள் பேச ஆரம்பித்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.