states

img

மலையாள திரையுலக பாலியல் சுரண்டல் ஹேமா கமிட்டியின் அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மலையாள திரையுலக பாலியல் சுரண்டல் தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக் கை கேரளா மட்டுமின்றி இந்திய திரையுலகையே உலுக்கிய நிலையில், கேரள அரசைப் போல அனைத்து மொழி திரையுலகிலும் நடிகைகளின் புகார்க ளுக்கான விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என கோ ரிக்கைகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில், நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக் கை தொடர்பான வழக்கு செவ்வாயன்று கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பி யார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அரசு மற்றும் மனுதாரர் வாதத்திற்கு பின்பு உயர் ர்நீதிமன்ற நீதிபதிகள்,” ஹேமா கமிட்டி அறிக்கை யின் முழுவடிவத்தையும் சிறப்பு புலனாய்வுக் குழு விடம் (எஸ்ஐடி) ஒப்படைக்க வேண்டும்” என உத்தர விட்டனர். 

தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில்,”எஸ்ஐடி அறிக்கையை விசாரித்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டிய விசயங்கள் இருந் தால் அதைத் தொடர வேண் டும். அறிக்கையின் ரகசியத் தன்மையை பராமரிக்க  அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்ஐடி குழு செய்ய வேண் டும். புகார்தாரர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தனி யுரிமை முழுமையாகப் பரா மரிக்கப்பட வேண்டும். வாக்குமூலம் கொடுத்த வர்கள் உள்ளிட்ட தகவல்க ளை வெளியிடக்கூடாது. அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. 

புகார்தாரர் வழக்கைத் தொடர விரும்பவில்லை என்றால், அது மதிக்கப்பட வேண்டும். போக்சோ குற்றங்கள் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் மீது வழக்குப் பதிவு செய்ய லாம். அவசரப்பட்டு செய லில் இறங்கக் கூடாது; விசார ணை நடத்தக்கூடாது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு வழக்கு மீண்டும் விசார ணைக்கு வரும்போது என்ன நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன என்பதைக் குறிப்பி ட்டு எஸ்ஐடி மற்றும் அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களையும் அனுப்ப வேண்டும். கேரள சமூகத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்ப தால், திரைப்படம் மட்டு மின்றி கேரள சமூகத்திலும் பெண்கள் சந்திக்கும் பிரச்ச னைகளை தீர்க்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற நீதிபதி கள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சி.எஸ்.சுதா உத்தரவிட்டனர்.