states

img

கேரளாவில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

கேரளத்தில் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும். கேரளா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி சுழற்சி மற்றும் வடக்கு கேரளாவிலிருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது.

;