திருவனந்தபுரம், நவ. 23 - முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கியதில், பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு சாதனை படைத்துள்ளது. புதிய கேரள அரங்கை (நவகேரள சதஸ்) விட, உம்மன் சாண்டி அரசின் மக்கள் தொடர்புத் திட்டம் மக்களுக்குப் பலனளித்தது என்று காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) தலைவர்கள் பிரச்சா ரம் செய்து வந்தனர். ஆனால், அவர் களின் இந்த பிரச்சாரம் அபத்தமானது என்று, இடது ஜனநாயக முன்னணி அம்பலப்படுத்தியுள்ளது. உம்மன் சாண்டி ஆட்சியில், மக்கள் தொடர்பு திட்டம் மூலம் முதல மைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டன. அதற்காக நோயாளிகள் பல மணி நேரம் கடும் வெயிலிலும், இரவு நேரத்திலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் தொடர்புத் திட்டம் நடத்தியபோதிலும், உம்மன் சாண்டி அரசு அதன் 5 ஆண்டுகளில் பொது மக்களுக்கு ரூ. 808 கோடியே 78 லட்சத்தை மட்டுமே உதவியாக வழங்கி யிருந்தது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநா யக முன்னணி (LDF) அரசு, ஏழரை ஆண்டுகளில் ரூ. 7 ஆயிரத்து 633 கோடியை வழங்கியுள்ளது. பினராயி விஜயன் அரசானது தனது முதல் ஐந்தாண்டுகளில் 5 ஆயிரத்து 719 கோடியே 95 லட்சம் ரூபாயையும், அடுத்த இரண்டரை ஆண்டு ஆட்சியில் ஆயிரத்து 917 கோடியே 33 லட்சம் ரூபா யையும் மக்களுக்கு பல்வேறு வகை களில் நிவாரண உதவியாக வழங்கி யுள்ளது. யுடிஎப் ஆட்சியின் போது சீர்குலைந்த நிலையில் இருந்த முதல்வரின் துயர்துடைப்பு நிவாரண நிதியின் (CHIEF MINISTER’s DISTRESS RELIEF FUND - CMDRF) செயல்பாட்டை எல்டிஎப் அரசாங்கம் நவீனமயமாக்கி வெளிப்படையான தாக மாற்றியுள்ளது. தனி போர்ட்டல் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவது முதல், நிதியுதவி நேரடியாக பயனா ளியின் கணக்கில் வரவு வைக்கப்படு வது வரை, செயல்முறையை முற்றி லும் ஆன்லைனில் மாற்றியது. முதலமைச்சரின் குறை தீர்க்கும் அமைப்பும் அறிவியல் பூர்வமாக செயல் படுகிறது. புகார்களை பெறுவதற்கான ஆன்லைன் அமைப்பும், தலைமைச் செயலகத்தில் நேரடியாக செயல்படு கின்றன. பெறப்படும் ஒவ்வொரு புகா ருக்கும் ரசீது வழங்கப்படும். இதன் மூலம் இதுவரை 5 லட்சத்து 41 ஆயி ரத்து 042 புகார்கள் வந்துள்ளன. புகார்களுக்கு உரிய நேரத்தில் தீர்வுகாண, மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரி களின் நெட்வொர்க் உள்ளது. புகாரின் நிலையை அறியும் அமைப்பும் உள்ளது.