states

img

உளறல்களால் கேரளத்தின் தனித்துவத்தை அழிக்க முடியாது

கொச்சி,அக்.30-    களமசேரி குண்டுவெடிப்பு தொடர் பாக ஒன்றிய தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறிய கருத்து மடத்தமானது என்றும், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நாட்டின் அமைச்சர் ஒருவர் இப்படித்தான் பதிலளிக்க வேண்டுமா? என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார்.  ‘ராஜீவ் சந்திரசேகரை விஷம் என்று கூறக்கூடாது, கொடிய விஷம்’ என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். களமசேரியில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தையும், காயமடைந்த வர்களையும் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மேலும் கூறுகையில், “ராஜீவ் சந்திர சேகர் கேரளத்தின் மதச்சார்பின்மை, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை அழிக்க முயன்றார். நாட்டின் விசார ணை அமைப்புகளின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா? விசாரணை சிறப்பாக நடந்து வருகிறது.

மத்திய அமைப்புகளும் உறுதுணையாக உள்ளன. இவர்கள் யாரையும் நம்ப  முடியாதவிதத்தில் ராஜீவ் சந்திர சேகரின் பேச்சு உள்ளது. நேற்று நடந்த சம்பவம் குறித்து  அறிந்தவுடன் ஒன்றிய உள்துறை அமைச்சரே (அமித்ஷா) அழைத்தார். இந்த விவகாரம் அவர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது, தேவைப் பட்டால் கூடுதல் உதவி கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதுதான் முறை. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு பிரிவினர் மீது  கரிபூசும் வகையில் ராஜீவ் சந்திர சேகரின் அறிக்கை இருந்தது. அவ ருடன் சில கூட்டாளிகளும் அவர் கூறி யதை வழிமொழிந்தனர். கேரளத்தின் தனித்துவத்தை அழிக்க இதுபோன்ற உளறல்களால் முடியாது. அவரது பேச்சு விஷம் என்று ஏற்கெனவே கூறியதை இப்போது கொடிய விஷம் என்று வேண்டுமானால் கூறலாம்” என முதல்வர் தெரிவித்தார். “நாங்கள் எப்போதும் பாலஸ்தீனத்துடன் நின்று கொண்டி ருக்கிறோம். ஆனால் ராஜீவ் சந்திர சேகரின் அரசு என்ன செய்து கொண்டி ருக்கிறது? பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முயற்சிக் கிறார்கள். ஜமாத்தே இஸ்லாமியின் இளைஞர் பிரிவினர் நடத்திய ஆதரவு  நிகழ்ச்சியில் பாலஸ்தீன போராளி ஒரு வரின் பேச்சு கேட்டதாக கூறப்படு கிறது. அது பதிவு செய்யப்பட்ட பேச்சு என்று நினைக்கிறேன். இதைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்ட போது, காவல்துறை அனுமதி வழங்கியது” என்றும் முதல்வர் கூறினார்.