states

கேரளத்தில் ஆன்லைன் வகுப்புகள் திறன் மிக்கவை: கல்வி அமைச்சர் உறுதி

திருவனந்தபுரம், ஜன.24- கேரளத்தில் ஆன்லைன் வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார். தற்போது, பயிற்சி மற்றும் உள்நுழைவு ஐடி அனைத்து உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜிஸ்ஸுட் ஆன்லைன் தளத்தில் வழங்கப் படுகிறது. எட்டு முதல் பத்து மற்றும் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு லாக் இன் ஐடி கொடுத்து வகுப்புகள் நடத்தப்படு கின்றன.  பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை இந்த வாரம் முடிவடையும். அதன் அடிப்ப டையில், பிளஸ் ஒன் மாணவர்களுக்கான உள்நுழைவு ஐடிக்கள் இந்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். வித்யாகிரணம் திட்டத்தின் முதற்கட்ட மாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து எஸ்டி மற்றும் எஸ்சி மாணவர் களுக்கும் 45,313 மடிக்கணினிகள் வழங்கப் பட்டுள்ளன. இவற்றுடன் ஏற்கனவே பள்ளி களில் உள்ள 1.2 லட்சம் மடிக்கணினிகள் ஏழைக் குழந்தைகளின் பொதுப் பயன் பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 1 முதல் நேரடி வகுப்புகளுடன் டிஜிட்டல் வகுப்புகளும் கைட்-விக்டர்ஸ் மூலம் ஆன்லைன் பள்ளிகளில் கிடைக்கும் என்று பொதுக்கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதன்படி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் கைட்-விக்டர்ஸ் மூலம் டிஜிட்டல் வகுப்புகள் வழங்கப்படுகின்றன. ஜனவரி 21 முதல் இந்த வகுப்புகளுக் கான மறு திட்டமிடப்பட்ட அட்டவணையை யும் கைட் வெளியிட்டது. இந்த வகுப்பு களுக்கு தொடர் ஆதரவை முன்பு பள்ளி கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இதை ஒன்பது வகுப்புகள் வரை ஆசிரியர்கள் மூலம் விரிவுபடுத்த வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது என்று அமைச்சர் வி.சிவன்குட்டி கூறினார்.