கொச்சி / நாகர்கோவில், மே 7- ஈரானில் பணியிடத்தில் நடந்த கொடுமையிலிருந்து தப்பிய மீனவர்கள் படகு மூலம் கொச்சி வந்தடைந்து தமிழகம் திரும்பினர். கொச்சி வந்த மீனவர்கள் 6 பேரும் விசாரணைக்குப் பிறகு துறைமுக குடிய கல்வு அலுவலகத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் இந்திய குடிமக்கள் என்ப தற்கான ஆவணங்களை சமர்ப் பித்த பிறகே அவர்கள் தமி ழகம் திரும்ப அனுமதிக்கப் பட்டனர்.
இவர்கள் தப்பி வந்த, ஈரான் நாட்டு படகு, கொயி லாண்டி கடற்கரை அருகே வந்தடைந்தது. அதனை கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். இதுகுறித்த வீடியோவை கடலோர காவல் படை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேல் நட வடிக்கைக்காக மீனவர்கள் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் கடலோர காவல்படை, கடற் படை மற்றும் கடலோர போலீசார் விசாரணை நடத்தி னர். தாங்கள் ஏமாற்றப்பட்ட விதத்தை விவரித்தனர். தொழிலாளர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் ஈரான் படகின் பதிவு நகல்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்கள் இந்திய குடிமக்கள் என்பதை அதிகாரப்பூர்வ குழு உறுதிப்படுத்தியது. மீன வர்களின் உறவினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதி நிதிகள் கொச்சி வந்திருந்த னர். படகு செவ்வாயன்று கொச்சி முதலாவது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.
உறவினர்களுடன் சந்திப்பு
இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலா ளர் அருட்பணி சர்ச்சில் வெளியிட்டுள்ள அறிக்கை யில் இதுகுறித்து கூறப் பட்டுள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சார்ந்த மரிய டெனில் 38, ராமநாத புரம் மாவட்டம் திருப்பாலை குடியை சார்ந்த நித்திய தயாளன் (30), கலைதாஸ் (45), அருண் தயாளன் (27), வாலாந்தருவையை சேர்ந்த ராஜேந்திரன் (30), பாசிபட்டினத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (37) ஆகியோர் ஈரானிலிருந்து தப்பித்து பதினான்கு நாட்கள் சுமார் மூன்று ஆயிரம் கிலோ மீட்டர் படகில் பயணித்து கேரள கடல் எல்லைக்கு வந்தனர். அவர்களை கொச்சி இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.
இந்த மீனவர்கள் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஈரான் நாட்டில் அந்நாட்டு முதலாளி சையிது சவுது ஜாபரி என்பவரது படகில் மீன்பிடி தொழில் செய்வதற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். உறுதி யளித்தபடி மீனவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப் படவில்லை. ஆனால் ஒவ் வொரு நாளும் தொடர்ந்து மீன்பிடிக்க செல்வதற்கு மீன வர்கள் வற்புறுத்தப் பட்டுள்ளனர். மீனவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப் பட்டுள்ளனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கும் அனுமதி கொடுக்கவில்லை. உயிருக்கு பயந்து மீன வர்கள் எப்படியாவது ஈரான் முதலாளியின் பிடியிலிருந்து தப்ப வேண்டும் என திட்ட மிட்டுள்ளார்கள்.
அதன்படி தாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகு மூலமாக இந்தியா வுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி கடல் வழி யாக பயணம் செய்துள் ளார்கள்.
கடந்த 5 ஆம் தேதி ஈரான் மீன்பிடி படகு கேரள கடற்பகுதிக்குள் நுழைந்தது. இந்திய கட லோர காவல்படையினர் அந்த படகை தடுத்து கொச்சிக்கு கொண்டுவந்து, விசாரணை நடத்தினர். பின்னர் தெற்காசிய மீன வர் தோழமை பொதுச் செய லாளர் அருட்பணி சர்ச்சில் மற்றும் ஆறு மீனவர்களின் குடும்பத்தினர்கள் கொச்சி க்கு சென்று அங்குள்ள அதி காரிகளின் உதவியுடன் எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்படாமல் சொந்த ஊருக்கு அழைத்து வந்த னர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.