states

img

சொப்னா சுரேஷின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பாஜக : சீத்தாராம் யெச்சூரி

திருச்சூர், ஜுன் 14- தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டின் பின்னணியில் பாஜக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக அல்லாத அரசுகளை வலுவிழக்கச் செய்ய, மத்திய அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இது பகல் போல் தெளிவாக  இருக்கிறது. இடதுசாரி அரசை கவிழ்க்கும் நோக்கில் இங்கு  விவாதம் எழுந்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன்  பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கருப்பு உடை அணிவதையோ, முக கவசம் அணிவதையோ தடுக்குமாறு காவல்துறைக்கு அரசு அறிவுறுத்தவில்லை. அப்படி நடப்பதான தோற்றத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சியின் நிலைப்பாடு எல்லை மீறியதாக இருக்க முடியாதது. சில்வர் லைன் (கே-ரயில்) என்பது ஒன்றிய  மற்றும் மாநில கூட்டு முயற்சியாகும். ஒப்புதல் கிடைத்தவு டன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று யெச்சூரி கூறினார்.