states

img

கேரள பள்ளிகளில் மதிய உணவில் சத்தான சாதம் : அமைச்சர் ஜி.ஆர்.அனில்

திருவனந்தபுரம், மார்ச் 14- கேரளத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் சம்பா அரிசி அடுத்த கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள பள்ளி களுக்கு மதிய உணவாக வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஜி ஆர் அனில் தெரிவித்தார்.

பாடநூல் விநியோகத்தின் மாநில அளவிலான தொடக்க விழாவில் அவர் மேலும் பேசுகையில், 

மாநில விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை சேமித்து அரிசியாக மாற்றி தற்போது ரேசன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அரிசியை பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மாநில அரசு விரும்புகிறது. தேவையான அரிசியை வழங்க தயாராக உள்ளதாக உணவுத்துறை கல்வித்துறைக்கு தகவல் தெரி வித்துள்ளது. இந்த விவகாரம் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஒப்புத லுக்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.