ஒஸ்லோ, அக்.8- நார்வே மலையாளிகள் கேரளாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்ற னர். நார்வேயில் ‘நன்மா’ என்ற மலையாளி சங்கத்தின் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க வந்த முதல்வர் பினராயி விஜயனிடம் முத லீட்டுக்குத் தயார் என சிலர் குறிப்பிட்டனர். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் தெரிவித்தார். கேரளாவில் அரசு செயல்படுத்த உத்தே சித்துள்ள விசயங்கள் மற்றும் நார்வே பயணத்தின் பயன்கள் குறித்து மலையாளி சங்கத்திடம் முதல்வர் விளக்கினார். நார்வேயில் கிடைக்கின்ற பல வசதிகளை கேரளத்திலும் அளிக்க விரும்புவதாகவும், அதற்காக ஒன்றிணைந்து செயற்பட முடியும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார். புதிய கேர ளம் குறித்த தொலைநோக்கு திட்டத்தின் முக்கிய உள்ளடக்கம் மற்றும் கடந்த ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட முக்கிய விசயங்கள் குறித்து முதல்வர் விளக்கி னார். 1970 முதல் நார்வேயில் மலையாளி கள் இருந்தாலும், 2000 முதல், மலையாளி கள் குடியேறத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் தொழில் வல்லுநர்கள். நார்வேயில் ஓய்வூதிய முறை குறித்து விரிவான ஆய்வு நடத்தவுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார். நார்வேக்கு கேரள முதல்வர் செல்வது இதுவே முதல்முறை என்றும், அதில் பெருமைப்படுவதாகவும் நன்மா தலைவர் சிந்து எப்ஜில் தெரிவித்தார். பெரும்பாவூரைச் சேர்ந்த சிந்து பதினேழு வருடங்களாக நார்வேயில் உள்ளார். முதல்வருடன், தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் மற்றும் தலைமைச் செயலாளர் டாக்டர்.வி.பி.ஜாயும் உடனிருந்தனர்.