மக்களவைக்குத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலை யில், நாட்டில் குழப்பத்தை யும், அமைதியின்மையையும் ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கத் தோடு ஒன்றிய அரசாங்கம் குடியுரி மைத் திருத்தச் சட்டத்திற்கு விதி களை அறிவித்திருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகம், குடியுரி மைத் திருத்தச் சட்டத்திற்கான விதி களை மக்களவைக்குத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு அறிவித்திருக்கிறது.
இது, மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக வும், மக்கள் மத்தியில் மதவெறி உணர்வுகளைத் தூண்டுவதற்காக வும், அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படை உரிமைகளை அரித்து வீழ்த்து வதற்காகவும் கொண்டுவரப்பட்டி ருக்கிறது. சம உரிமைகளுடன் வாழ்ந்துவரும் குடிமக்களைப் பிளவுபடுத்திடுவதற்காகக் கொண்டுவரப்படும் இந்நடவ டிக்கையை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று முறியடித்திட வேண்டும்.
மதவெறி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி
இந்நடவடிக்கையை சங் பரி வாரத்தின் இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. 2014 டிசம்பர் 31 அன்றோ அல்லது அதற்கு முன்போ பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தா னத்திலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ளவர் களில் முஸ்லிம்களுக்குக் குடியுரி மையை மறுத்துவிட்டு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடி யுரிமை வழங்க நடவடிக்கை எடுத்தி ருப்பது அரசமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். இது இந்தியாவில் குடியுரிமையை மதத்தின் அடிப்படையில் வரை யறுக்கிறது. இது இதுநாள்வரை யிலும் சமமாக வாழ்ந்துவரும் மனிதகுலத்திற்கும், நாட்டின் மதச்சார்பற்ற பாரம்பரியத்திற்கும் அதன் மக்களுக்கும் விடுக்கப்பட் டுள்ள பகிரங்கமான சவாலாகும்.
முதல் தீர்மானம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற் றிய முதல் சட்டமன்றப் பேரவை கேரள சட்டமன்றப் பேரவையா கும். கேரள அரசாங்கம், மாநிலத் தில் தேசிய மக்கள்தொகைப் பதி வேடு (National Population Register) அமல்படுத்தப்பட மாட்டாது என்று அறிவித்திருந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதி ரான ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அர சாங்கத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குடி யுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என்று உரக்கக் குரல் கொடுத்து கேரளாவில் மஞ்ஞேஸ்வரிலிருந்து பாரசாலா வரையிலும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறான மக்களின் எதிர்ப்பு கள் மற்றும் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் மதவெறி நிகழ்ச்சிநிரலை அமல் படுத்திட வேண்டும் என சங் பரி வாரம் வலியுறுத்திக் கொண்டி ருக்கிறது.
கேரள இடது ஜனநாயக முன் னணி அரசாங்கம், முஸ்லிம் சிறு பான்மை மக்களை இரண்டாம்தர பிரஜைகளாகக் கருதிடும் குடியு ரிமைத் திருத்தச் சட்டம் கேரளா வில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று பலசமயங்களில் திரும்பத் திரும்ப கூறி வந்திருக்கிறது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த மத வெறி மற்றும் பிளவுவாத சட்டத்தை எதிர்ப்பதில் கேரளம் ஒன்றுபட்டு நிற்கும்.
தமிழில்: ச.வீரமணி