திருவனந்தபுரம், பிப்.6 - ‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களை காப்போம், தொழிலாளர்களைக் காப்போம்’ என்ற முழக்கத்தின் கீழ் மார்ச் 13 முதல் 20 வரை நாடு தழுவிய அளவில் போராட் டம் நடத்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேசிய மாநாடு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பை சமாளிப்பது என்ற பெயரில் அறி விக்கப்பட்ட நிதி தொகுப்பிலோ, ஒன்றிய பட்ஜெட்டிலோ எந்த உதவியும் அறிவிக்கப்படவில்லை. எரிபொருள் விலை உயர்வைத் தவிர, மோட்டார் வாகனச் சட்டத் திருத்தப் பரிந்துரைகளைத் திணித்து போக்குவரத்துக் கழகங்களை தகர்க்க ஒன்றிய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மார்ச் 13 முதல் 20 ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப் படும். ஏப்ரல் 5 ஆம் தேதி நாடாளுமன்ற அணிவகுப்பு வெற்றிகரமாக நடைபெறும். ஐதராபாத் சுந்தரய்யா அறிவியல் கேந்திராவில் நடை பெற்ற அகில இந்திய மாநாட்டை, அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தேசிய பொதுச் செயலா ளர் ஆர்.லக்ஷ்மையா தொடங்கி வைத்தார். ஜிபான் சாஹா தலைமை வகித்தார். மாநாட்டில் பொருளாளர் சி.கே.ஹரி கிருஷ்ணன், ஆறுமுக நயினார், வி.எஸ்.ராவ், எஸ்.வினோத், வி.சாந்தகுமார், சுஜித் சோமன் உள்ளிட்டோர் பேசினர்.