states

img

கேரளத்துக்கு உரிய பலன்களை மறுத்து மக்களுக்கு சவால் விடும் ஒன்றிய அரசு

திருவனந்தபுரம், ஜன.23- கேரளத்துக்கு உரிய பயன்களை மறுத்து மக்க ளுக்கு ஒன்றிய அரசு சவால் விடுவதாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் எம்.வி.கோவிந்தன் சாடினார்.

கேரளா வள ரக் கூடாது, உலகின் முன் உதாரணமாக இருக்கக் கூடாது என்கிற ஒன்றிய அர சின் எதிர்மறை அணுகுமு றையை கேரளம் அங்கீகரிக் காது என்றார் அவர். கேரளத்தில், ஒன்றிய  மோடி அரசின் அணுகு முறை யைக் கண்டித்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சனி யன்று (ஜன.20) மாலை நடத்திய பிரம்மாண்ட மனிதச் சங்கிலிக்குப் பிறகு  திருவனந்தபுரத்தில் ஆளு நர் மாளிகை முன்பு நடை பெற்ற பொதுக்கூட்டத்தை அவர் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் மேலும் பேசுகையில்,  “ஒன்றிய அரசு உரிய பங்கை கேரளத்துக்கு தராத தால், மக்களுக்கு பலன் களை வழங்க முடியவில் லை. மத்திய பங்கு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க ஒன்றிய அரசு முன் வந்தால் கேரளாவின் பிரச்ச னைகள் தீர்ந்துவிடும். பொருளாதார நெருக்க டியில் கேரளம் எச்சரிக்கை யுடன் முன்னேறி வருகிறது. அரசியல் காரணங்களுக் காக ஒன்றிய அரசு கேர ளத்தை புறக்கணிக்கிறது.

 ஒன்றிய அரசின் புறக் கணிப்பை எதிர்கொள்ள மக்கள் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் போராட்டம் தான். வாலிபர் சங்கம் அறி வித்த மனிதச் சங்கிலி என் கிற நெருப்பு எதிர்ப்பின் சுடர் முகமாக மாறியது.  மக்கள் ஒன்றிணைந்து கேரள போராட்ட வரலா ற்றில் புதிய அத்தியாய மாக மாறியுள்ளனர்” என் றார்.