திருவனந்தபுரம்,செப்.20 - நவீன கேரளத்தை நிர்மாணிப் பதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும் பங்காற்ற முடியும் என்று முதல் வர் பினராயி விஜயன் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சித் திட்டத்தை முத லமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் மேலும் அவர் பேசுகையில், சட்டசபை யின் செயல்பாடுகள் சட்டசபையின் விதிகள் ஒழுங்குமுறைகளின் அடிப் படையில் அமைந்துள்ளது. இது சரி யாக புரிந்து கொள்ளப்பட்டால், உறுப் பினர்கள் திறம்படவும் நம்பகத்தன்மை யுடனும் தொடர்பு கொள்ள முடியும். பேரவை ஈடுபாடு சரியான வீட்டுப்பாடத் தின் அடிப்படையில் இருக்கவேண்டும். சட்டப்பேரவைக்குள் எல்லை மீறா மல் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவான நட்பு சூழ்நிலை ஒரு கட்டத்தில் உடைந்து போவது நல்லதல்ல. வெவ்வேறு கண் ணோட்டங்கள் வலுவாக முன்வைக்கப் பட்டாலும், நம்முடைய கண்ணோட்ட த்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும். பிறர் நம்பாத விசயங்களை முன் வைப்பது நல்ல முன்மாதிரி அல்ல. பேரவை கமிட்டிகள், பிரச்சனைகளில் தலையிட்டு திருத்தும் சக்தியாக செயல்பட முடியும். பேரவைக் குழுக் களில் பங்கேற்பது மிகவும் முக்கிய மானது. குழுவின் முன் வரும் பிரச்ச னைகளை ஆய்வு செய்து, தலை யிட்டு முடிவெடுக்க விழிப்புடன் இரு க்க வேண்டும் என்று தெரிவித்தார். விழாவுக்கு தலைமை வகித்த சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் பேசுகை யில், சட்டப்பேரவை நடவடிக்கை யில் தலையிடுவது குறித்து உறுப்பின ர்களுக்கு பயிற்சி அவசியம் என்றார். துணை சபாநாயகர் சித்தயம் கோப குமார், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், இணை தலைமைக் கொறடா என்.ஜெயராஜ், மோன்ஸ் ஜோசப் எம்எல்ஏ, பேரவைச் செயலர் ஏ.எம். பஷீர் ஆகியோர் பேசினர். இந்தப் பயிற்சி புதன்கிழமையன்று நிறை வடைந்தது.