states

img

பண்டிகைக் கால விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

திருவனந்தபுரம், டிச. 26 - பண்டிகைக் காலங்களின் போது, பொதுச் சந்தையில் விலைவாசி உயர்வைக்  கட்டுப்படுத்தும் வகையில், கேரள அரசு உரிய தலையீடுகளை செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. 

அந்த வகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, ‘சப்ளைகோ’ மற்றும் கூட்டுறவுச் சந்தை மூலம் 965 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 462 ரூபாய் 50 காசுகளுக்கு கேரள அரசு வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுச்சந்தையில் 5 கிலோ ஜெயா அரிசி-யின் விலை ரூ. 225. இதுவே கூட்டுறவுச் சந்தையில் ரூ. 125-க்கு கிடைக்கிறது. 100 ரூபாய் குறைவு. இந்த வித்தியாசத்தை உணர்ந்து சப்ளைகோ மற்றும் கூட்டுறவு சந்தைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். 

சப்ளைகோ சந்தைகளில் சர்க்கரை தவிர மற்ற பொருட்கள் மானிய விலையில் கிடைக்கின்றன. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்
களில் சந்தைகள் உள்ளன. சுமார் 1,600 சப்ளைகோ விற்பனை நிலையங்களி லும் இதே விலையில் பொருட்கள் கிடைக்கும்.

பொதுச் சந்தையைவிட இங்கு 30 முதல் 50 சதவிகிதம் வரை மலிவாக பொருட்கள் கிடைக்கின்றன. 
14 மாவட்ட மையங்களில் கூட்டுறவு சந்தை உள்ளது. இது ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும்.

மானியம் அல்லாத பொருட்களையும் பொதுச் சந்தையை விட 10 முதல் 40 சதவிகிதம் மலிவாக வாங்கலாம். பிரியாணி அரிசி, டால்டா, கோதுமை மாவு, மைதா, ரவை, அரிசி மாவு, சேமியா, பல் அடை, அரிசி அடை, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் இதர அத்தியாவசி யப் பொருட்களும் சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சந்தை டிசம்பர் 30 அன்று நிறைவடைகிறது.