திருவனந்தபுரம், அக்.30- செவித்திறன் கருவியை இழந்த ராஜாஜி நகரைச் சேர்ந்த ஜெகதி பதிரா வித்யாலயாவில் பிளஸ் டூ படிக்கும் ரோஷனுக்கு காது கேட்கும் கருவி யை மேயர் ஆர்யா ராஜேந்திரன் வழங்கினார். புதிய செவிப்புலன் கருவியை வழங்கியபோது அந்த முகத்தில் ஏற்பட்ட புன்னகை மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக மேயர் தனது முகநூலில் எழுதியுள்ளார். ரோஷனின் ரூ.1.38 லட்சம் மதிப்புள்ள செவிப்புலன் கருவி அடங்கிய பை வியாழனன்று (அக்.27) காணாமல் போனது. ரோஷனின் காது கேட்கும் கருவியைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் ரோஷனால் இழந்த செவிப்புலன் கருவியை திரும்பப் பெற முடியவில்லை. இதுகுறித்து ரோஷனுக்காக ஆர்யா முகநூலில் ஒரு பதிவு போட்டார். அதில், ரோஷ னுக்கு காது கேட்கும் கருவியை மீட்டுத்தர அனைவரும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண் டார். காது கேட்கும் கருவி கிடைக்க வில்லை என்றால், புதிய காது கேட்கும் கருவியைப் பெறுவது குறித்து ஆராய்வதாகவும் ஆர்யா கூறி யிருந்தார். இதன்பிறகு, ரோஷனுக்கு மேயர் காது கேட்கும் புதிய கருவியை வழங்கினார். நான்கு மாதங்களுக்கு முன்பு புனர்ஜனி திட்டத்தின் மூலம் காது கேட்கும் கருவி கிடைத்ததில் இருந்து நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதாக தந்தை லெனின் கூறினார். ரோஷன், செவித்திறன் குறைபாடு மற்றும் குறுகிய கால்கள் இருந்தபோதிலும், ராஜாஜி நகரின் கால்பந்து அணியில் ஒரு சிறந்த வீரர். குழந்தை நடிகரு க்கான மாநில விருது பெற்ற சினேகா அனுவுடன் தல என்னும் திரைப் படத்திலும் ரோஷன் நடித்துள்ளார். யுனிசெப்பின் குழந்தை சாத னையாளர் விருதையும்வென்றுள்ளார்.