கோழிக்கோடு, மே 2- வகுப்புவாதத்தை பரப்பும் தீய சக்திகளை விரட்ட, தொழி லாளர்கள் அதிக ஒற்றுமையு டன் செயல்பட வேண்டும் என சிஐடியு மாநில பொதுச் செய லாளர் எளமரம் கரீம் எம்.பி தெரிவித்தார். கோழிக்கோட்டில் சர்வ தேச தொழிலாளர் தின பேர ணியை துவக்கி வைத்து பேசி னார். அப்போது அவர், நாடு முழுவதும் கடுமையான வகுப்புவாத பதற்றம் உரு வாக்கப்படுகிறது என்றார். கேரளம் ஒரு வித்தியாசமான பகுதியாக உள்ளது. இது அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய இடம். ஆனால் இங்கே கூட, சில நுண்ணுயிரி கள் உங்களை விஷமாக்க முயற்சிக்கின்றன. அண்மை யில் திருவனந்தபுரத்தில் பி.சி. ஜார்ஜ் பேசியது பொதுவெளி யில் சொல்ல முடியாத ஒன்று. மதத்தின் பெயரால் மோதல்க ளைத் தூண்டுவதற்காக பச்சையாக வன்முறையைத் தூண்டிக்கொண்டிருந்தார். தொழிலாளர்கள் இதை தீவிர மாக எடுத்துக் கொள்ள வேண்டும். சாதி-மதம்-மொழி-பிராந் திய வேறுபாடுகள் தொழிலா ளர்களின் சக்தியை பலவீனப் படுத்தும். இயக்கங்கள் பல வீனமடையும் போது, தொழி லாளர்கள் கடந்த காலத்தைப் போல் அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுவார்கள். தொழி லாளர்கள் ஒன்றுபட்டால் அந்த சக்தியை யாராலும் உடைக்க முடியாது என்றார் கரீம்.