states

img

ஆளுநரின் மலிவான பேச்சுக்கு பதிலளித்து தரம் தாழ்த்திக் கொள்ள மாட்டோம்!

கோழிக்கோடு, பிப்.20-  கேரள ஆளுநரின் மலிவான பேச்சு க்கு பதில் அளித்து தனது தரத்தை தாழ்த்திக்கொள்ள முடியாது என்று  அமைச்சர் ஆர்.பிந்து பதிலடி கொடுத்துள் ளார். உயர் கல்வித்துறை அமைச்சரை “குற்றவாளி (கிரிமினல்) என்று கூறிய ஆளுநரின் நடத்தை குறித்து செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு பதி லளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.  மேலும் அமைச்சர் பிந்து கூறுகை யில், “ஆளுநர் கூறியதற்கு பதில்  சொல்ல தேவையில்லை.

ஆளுநர் தனது பதவிக்கு ஏற்ப நடந்து கொள்வ தில்லை, அதனால் மற்றவர்களும் அது போல் தமது பதவியை மறந்து பேச முடி யாது. எனது பொறுப்புகளை முழுமை யாக உணர்ந்துள்ளேன். ஆளுநரை போன்று மலிவான கருத்துக்களைக் கூறி எனது தரத்தை சமரசம் செய்யத் தயாராக இல்லை” எனத்  தெரிவித்துள் ளார். முன்னதாக, முதல்வரைக் குற்ற வாளி என்று ஆளுநர் கூறியிருந்தார். ‘ப்ளடி கண்ணூர்’ என்று ஒரு மாவட்டத்தை இழிவுபடுத்தினார்.

மாநி லத்தின் ஒட்டுமொத்த மக்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் விதத்தில் ஆளுநர் பேசுகிறார். கேரளா வின் உயர்கல்வித் துறை தரமானதாக உள்ளது. கேரளத்தைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சந்திரயான் பணியில் பங்கேற்றன. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் உட்பட முக்கியப் பதவி களில் மலையாளிகள் உள்ளனர். உயர்கல்வித்துறையை மேலும் வலுப்படுத்த அரசு முயற்சித்து வரு கிறது. இதற்கிடையில், விவாதங் களின் பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதே அரசின் அணுகுமுறை.

திட்டமிட்டு விவா தங்களை கிளப்புவது சிலரது வழக்கம். உரையாடல் மற்றும் ஆக்கப்பூர்வமாக பணிகளைச் செய்வதற்கு முக்கியத்து வம் கொடுக்கப்படுகிறது. கேரளத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக பாடுபடுவதன் மூலம் புதிய கேரளா வை உருவாக்க வழிவகை செய்வதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.