கேரளாவில் பி.எஃப்.ஐ அமைப்பினர் தாக்கியதாக ராணுவ வீரர் நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது.
கேரள மாநிலம் கடாக்கள் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஷினே குமார், தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பினர் தன்னை தாக்கியதாகவும், முதுகில் பி.எஃப்.ஐ என அவர்கள் எழுதிவிட்டு தப்பி ஓடியதாகவும் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராணுவ வீரர் ஷினே குமார், தனது சட்டையை தானே கிழித்துக்கொண்டு, தனது நண்பரை பி.எஃப்.ஐ என்று எழுதச் சொன்னதாக அவரது நண்பர் ஜோஷி வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்மூலம் பி.எஃப்.ஐ அமைப்பினர் தாக்கியதாக தனது நண்பருடன் சேர்ந்து ராணுவ வீரர் நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது.
மேலும், ஷினே குமார் வீட்டிலிருந்து பெயிண்ட், சட்டையைக் கிழிக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.