states

img

POCSO சட்டம் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கேரள அரசு முடிவு!

கேரளாவில் 2024 ஆம் ஆண்டு முதல், POCSO சட்டம் குறித்த பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கேரள உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை அடுத்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வரை படிக்கும் மாணவர்களும் 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் POCSO சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஒருங்கிணைக்கப்படும் என்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.