states

சிஏஏவுக்கு எதிராக கேரள அரசு வழக்கு

புதுதில்லி, மார்ச் 16- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை 2019 டிசம்பரில் கொண்டுவந்த மோடி  அரசு, 2024 மார்ச் 11 முதல் நடை முறைக்கு வருவதாக அறிவித்துள் ளது.இது முஸ்லிம்களுக்கு பார பட்சமான சட்டம் என்பதால், நாடு  முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இந்திய அர சியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்றும் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வரு வதற்கான அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று, மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, சிஏஏவுக்கு எதி ராக உடனடி சட்ட நடவடிக்கை எடுப்ப தென கேரள மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அட்வகேட் ஜெனரல் (ஏஜி) சட்ட நட வடிக்கைகளுக்கு பொறுப்பேற்றார். அதனடிப்படையில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. குடியுரிமைச் சட்டம் முஸ்லிம் களுக்கு எதிரானது எனக் கூறி இந்  திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  சிபிஐ, முஸ்லிம் லீக் ஆகிய அமைப்பு களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. மொத்தம் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டு உள்ளன. இந்த அனைத்து மனுக்களும் மார்ச் 19 அன்று விசாரணைக்கு வரவுள்ளன.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்

பாஜக மதவெறி நிகழ்ச்சி நிரலின்

ஒரு பகுதியே..

பினராயி விஜயன் பேட்டி

பக்கம் - 5