கேரள சட்டமன்றத்தில் 61 பக்கங்கள் கொண்ட தனது உரையை முழுமையாக வாசிக்காமல், கடைசி பக்கத்தை மட்டும் 1.15 நிமிடத்தில் வாசித்துவிட்டு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடங்கி, கேரள சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அரசியலமைப்பின் 200-ஆவது பிரிவின் முதல் விதியில் உள்ள ‘கூடிய விரைவில்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிடப்பில் வைத்தது வரை ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரள அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்த நிலையில், இன்று கேரள சட்டமன்றம் இன்று கூடியது. அதில் பங்கேற்ற ஆளுநர் ஆரிப் முகமது கான், 61 பக்கங்கள் கொண்ட தனது உரையை முழுமையாக வாசிக்காமல், கடைசி பக்கத்தை மட்டும் 1.15 நிமிடத்தில் வாசித்துவிட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் கொள்கை திட்டங்களை வேண்டும் என்றே வாசிக்காமல் அவர் தவிர்த்துள்ளார்.