திருவனந்தபுரம், மார்ச் 22- தொழில் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவன மான கெல்ட்ரான், தமிழக அரசிடமிருந்து ரூ.1076 கோடி மதிப்பிலான மெகா பணி உத்தரவைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவை கழகத்தின் மூன்று போட்டி டெண்டர்களில் பங்கேற்று இந்த உத்தரவு பெறப்பட்டது. கெல்ட்ரானின் தகவல் தொழில்நுட்ப வணிகக் குழுவினால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.519 கோடியில் 8209 ஹைடெக் ஐடி ஆய்வகங்கள், பரா மரிப்பு மற்றும் பழுது நீக்கம் உட்பட 7,985 பள்ளிகளில் ஒருங்கி ணைக்கும் பணிகள் மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ஒரு பணி உத்த ரவு. பல்வேறு பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து பராமரிக்க ரூ.455 கோடி மதிப்பிலானது இரண்டாவது உத்தரவு. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 79,723 டேப்லெட் கணினிகள் வழங்க ரூ.101 கோடி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் டெஸ்க்டாப் கணினி, வெப் கேமரா, உட்புற ஐபி கேமரா, ஐந்து கேவிஏ யுபிஎஸ், இணைய ரூட்டர் மற்றும் நெட்வொர்க் இணைப்பு ஆகியவை அடங்கும். அவற்றின் ஒருங்கிணைப்பு, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் செய்யப்படுகிறது. கெல்ட்ரான் அதன் தினசரி செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும். ஒரு ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பில் மடிக்கணினி, ப்ரொஜெக்டர், யுஎஸ்பி மல்டிமீடியா ஸ்பீக்கர்கள் போன்றவை அடங்கும். வகுப்பறைகளுக்கு ஐந்து வருட ஆன்சைட் வாரண்டி சேவையையும் கெல்ட்ரான் வழங்கும். மேலும், கேரளத்தில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் ரூம்களையும் கெல்ட்ரான் நிறுவனம் அமைக்கிறது. இந்த ஆண்டு, ஒடிசாவில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க ரூ.168 கோடி மதிப்பி லான பணி உத்தரவையும் கெல்ட்ரான் பெற்றுள்ளது.