states

img

ஊரக வேலையில் 15 நாட்களுக்குள் ஊதியம்

திருவனந்தபுரம், நவ.12- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதி யம் தாமதமானால் இழப்பீடு வழங்க விதி  வகுக்கப்படும் என்று கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரி வித்தார். இதுகுறித்து அமைச்சர் வெளியிட்  டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்படி வேலை முடிந்த 15  நாட்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.  தாமதம் ஏற்பட்டால், 16 ஆவது நாளிலிருந்து செலுத்த வேண்டிய ஊதியத்தில் தினசரி 0.05 சதவிகிதம் தொழிலாளிக்கு இழப்பீடு  வழங்கப்படும். அதாவது, 15 நாட்களுக்குப் பிறகு, தொழிலாளி ஒரு நாளைக்கு 0.05  சதவீத இழப்பீட்டைப் பெறுவார். மாநில  வேலை உறுதி நிதியிலிருந்து இந்த இழப்  பீடு வழங்கப்படுகிறது. ஊதிய தாமதத் திற்கு காரணமான அதிகாரிகளின் சம்ப ளத்தில் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும். தொழிலாளர்களுக்கு சரியான நேரத்  தில் துல்லியமான ஊதியத்தை உறுதி  செய்வதற்கான அரசாங்கத்தின் தலையீடு களின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்  பட்டுள்ளது. மிகத் துல்லியமான ஊதி யத்தை உறுதி செய்வதில் நாட்டிலேயே கேரளா முன்னணியில் உள்ளது. ஒரு பணி யை முடித்த பிறகு, அதிகாரிகள் இரண்டு  நாட்களுக்குள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மேலாண்மை தகவல் அமைப்  பில் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வு உட்பட ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஆறு நாட்களுக்குள் ஊதியப் பட்டியலை தயாரித்து கணக்காளர்/ஐடி  உதவியாளர் ஏழு நாட்களுக்குள் தொகை யை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விதிகள் கூறுவதாக அமைச்சர் தெரி வித்துள்ளார்.