2025-ஆம் ஆண்டுக்குள் நிலமற்ற மற்றும் வீடற்ற பட்டியலினத்தவர், பழங்குடியினர் அனைவருக்கும் நிலம் மற்றும் வீடுகளை மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
எஸ்சிபி (சிறப்பு உபகரணத் திட் டம்) மற்றும் டிஎஸ்பி (பழங்குடி யினர் துணைத் திட்டம்) ஆகிய திட் டங்களை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்திய போதும், மக்கள் தொகை விகிதத்தை விட அதிக நிதி ஒதுக்கீடு செய்து அதை அப்படியே கடைப் பிடிக்கும் ஒரே மாநிலம் கேரளம் தான் எனவும் முதல்வர் குறிப் பிட்டார். கண்ணூரில் புதிய கேரள அரங் கத்தின் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் - தலித் குழுக்களுடனான நேருக்கு நேர் நிகழ்ச்சியை பிப்ரவரி 24 சனிக்கிழ மையன்று முதல்வர் பினராயி விஜ யன் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் பேசியதா வது: இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பட்டி யலினத்தவருக்கு 98,317 வீடு களும், பழங்குடியினருக்கு 41,804 வீடுகளும் உட்பட 1 லட்சத்து 40 ஆயி ரத்து 121 வீடுகள் கட்டி முடிக்கப்பட் டன. நில வங்கித் திட்டம், ஒதுக் கப்பட்ட வன நிலப் பங்கீடு மற்றும் வன உரிமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் 8,278 பழங்குடியினக் குடும் பங்களுக்கு 4,138 ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சரணால யங்களுக்கு வெளியே உள்ள பழங்குடியினருக்கு வீட்டு வசதி உத வித்தொகை ரூ.6 லட்சமாக உயர்த் தப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட வீடுகளின் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற் காக சேஃப் (SAFE) திட்டம் வகுக் கப்பட்டது. இதன்படி, பட்டியலி னத்தவருக்கு ரூ.2 லட்சமும், பழங் குடியினருக்கு ரூ.2.5 லட்சமும் ஒதுக் கப்படும். கடந்த நிதியாண்டில் 8 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டத் தில் சேர்க்கப்பட்டன. நிலமற்றோர் மறுவாழ்வு திட்டத்திற்கு விண்ணப் பிப்பதற்கான வயது வரம்பு 55 இல் இருந்து 70 ஆகவும், வருமான வரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட் டுத் துறைகளின் நிதியுதவியுடன் நிலம் வாங்க பயனாளிகள் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வீடு கட்டுதல், குடும்ப உறுப்பி னர்களின் சிகிச்சை, குழந்தைகளின் கல்வி மற்றும் மகள்களின் திரு மணம் ஆகிய நோக்கங்களுக்காக நிலமற்றோர் மறுவாழ்வுத் திட் டத்தின் கீழ் கிடைக்கும் நிலத்தை அடமானம் வைக்க பட்டியலினத்த வர் அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25 சத விகிதம் பேர் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்கான திட்டப் பங்கு 6 சத விகிதம் மட்டுமே. கேரளாவின் நிலை இதிலிருந்து வேறுபட்டது. இவ்வாறு முதல்வர் பேசினார்.