states

img

வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தும் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை

கோட்டயம், ஜூன் 11- நாட்டில் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சி நடப்பதாகவும், கேர ளத்தில் வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தும் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கோட்டயத்தில் சனிக்கிழமையன்று கேரள அரசு அதிகாரிகள் சங்கத்தின் (KGOA) மாநில மாநாட்டை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தை நிராகரித்த வர்களின் வாரிசுகள்தான் நாட்டை ஆள்வது. திட்டமிட்ட இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அவர்கள் செயல் படுத்தி வருகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத் திற்குக்கூட ஆர்எஸ்எஸ் சவால் விடுக்கிறது. மதச்சார்பின்மை அனைத்து நம்பிக் கையாளர்களையும் நம்பிக்கையற்ற வர்களையும் ஒரே மாதிரியாக நடத்து கிறது. நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மதச்சார்பின்மையை நம்புகி றார்கள். இருப்பினும், நாட்டில் சிறு பான்மை மதத்தினர் பல்வேறு கார ணங்களுக்காக தாக்கப்படுகிறார்கள். இதற்கு ஆட்சியாளர்களும் உறுதுணை யாக இருக்கிறார்கள் என்று முதல்வர் கூறினார். கேரளம் பதிலடி கொடுக்கும் முதல்வர் பினராயி விஜயன் மீது சேற்றை வீசி அவரது குடும்பத்தினரை தாக்க முயன்றால், கேரளா கடும் பதிலடி கொடுக்கும் என இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன் கூறினார்.

கோட்டயத்தில் கேரள அரசு அதிகாரி கள் சங்கத்தின் மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக திருநகரி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை அவர் வெள்ளியன்று தொடங்கி வைத்து பேசி னார். அப்போது அவர், எதிர்க்கட்சிகள் இதுவரை ஏதாவது சாதகமாக செய்துள் ளனவா என்று கேள்வி எழுப்பினார். எல்.டி.எப் அரசாங்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிரான வெறியை அவர்கள் காட்டுகிறார்கள். காங்கிர ஸூம் ஆர்எஸ்எஸ்ஸூம் தரக்குறைவான அரசியல் போரில் ஈடுபடக் கூடாது.  திருக்காக்கரையில் எஸ்டிபிஐ, ஜமாத்தே இஸ்லாமி, டுவென்டி 20, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் ஓட்டுக்க ளில் வெற்றி பெற்று முதலமைச்சரின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கும் கேவலமான ஆட்டம் காங்கிரசுக்கு அழகல்ல. தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெரும் வெகுமதி கொடுத்து, சொந்த நிறுவனத்தில் குடியமர்த்திய சங்பரிவார் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டை வகுப்புவாத ரீதியாக பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் திரள வேண்டும். மக்கள் ஆதரவு நிலைப்பாட்டின் மூலம், எல்.டி.எஃப் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி முன்னேறி வருகிறது. வெள்ளம் மற்றும் கோவிட் சூழ்நிலையில் மக்க ளுக்கு உதவ அதிகாரிகள் சங்கம் (KGOA) முன்வந்தது. ஊழலற்ற மக்கள் சேவைக்கு இச்சங்கம் வலுசேர்க்கிறது என்றும் ஈ.பி.ஜெயராஜன் கூறினார். பொதுக்கூட்டத்துக்கு கேஜிஓஏ மாநி லத் தலைவர் டாக்டர். எம்.ஏ.நாசர் தலைமை வகித்தார்.