states

img

ஒன்றிய அரசின் புறக்கணிப்பு

திருவனந்தபுரம், ஜன.14- கேரளம் மீதான ஒன்றிய அரசின் புறக்கணிப்பு மற்றும் தவறான அணுகுமுறைகள் தொட ர்ந்து வரும் சூழ்நிலை குறித்து எதிர்க் கட்சிகளுடன் முதல்வர் பினராயி விஜ யன் திங்களன்று (ஜன.15) ஆலோச னை நடத்தவுள்ளார்.

கேரளம் கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேறிவிட்டதாக கூறி பல்வேறு ஒதுக்கீடுகளை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் வரிப்பங்கீடும் மறுக்கப்பட்டு வருகிறது. கடன் எடுப்பதற்கான உரிமையும் மறுக்கப் பட்டு வருகிறது.   இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலை வர் வி.டி.சதீசன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி ஆகியோருடன்  காணொலி வாயிலாக கலந்துரையாடல் நடைபெறுகிறது.