states

img

கேரளம்: பி.எம்.எஸ் மாநில தலைவர் உட்பட 11 ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கைது

எஸ்.எஃப்.ஐ தலைவர் சிவபிரசாத்தின் தந்தை நாராயணன் நாயர் கொலை வழக்கில் கெ.எஸ்.ஆர்.டி.சி ஊழியர் சங்கத்தின் (பி.எம்.எஸ்) மாநில தலைவர் உட்பட 11 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கைது செய்ய நெய்யாட்டின்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் அனாவூரில் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆயுதம் ஏந்திய ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நாராயணன் நாயரின் வீட்டிற்குள் புகுந்து அவரது மகனும், எஸ்.எஃப்.ஐ தலைவருமான சிவபிரசாத்தை கொலை செய்ய முயன்றனர். அப்போது, அவர்களை நாராயணன் தடுத்து நிறுத்திய நிலையில், அவரது மனைவி மற்றும் மகன்கள் முன்னிலையில் அவர் கொலை செய்யப்பட்டார். சிவபிரசாத் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில், நாராயணன் படுகொலை செய்யப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் கெ.எஸ்.ஆர்.டி.சி ஊழியர் சங்கத்தின் (பி.எம்.எஸ்) மாநில தலைவர் உட்பட 11 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கைது செய்ய நெய்யாட்டின்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.