states

img

டெக்னோபார்க், டிஜிட்டல் பல்கலைக்கழகம் வரிசையில் கேரளத்தின் முதலாவது டிஜிட்டல் அறிவியல் பூங்கா

திருவனந்தபுரம், ஆக. 1   இந்தியாவின் முதல் டெக்னோ பார்க் மற்றும் இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை நிறுவி  நாட்டிற்கு முன்மாதிரியாக விளங்கும் கேரளா, நாட்டின் முதல் டிஜிட்டல் அறி வியல் பூங்காவைத் தொடங்கி உள் ளது. டிஜிட்டல் அறிவியல் பூங்காவை முதல்வர் பினராயி விஜயன் செவ்வாயன்று திறந்து வைத்தார். 33 ஆண்டுகளுக்கு முன்பு இ.கே.நா யனார் முதல்வராக இருந்தபோதுதான் நாட்டின் முதல் டெக்னோபார்க் கேர ளாவில் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டிலே யே முதல் டிஜிட்டல் பல்கலைக்கழ கத்தைத் தொடங்கி, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான செயல்பாடுகளில் கேரளா நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது. இந்த பல்கலைக்கழகத்திற்கு அடுத்ததாக டிஜிட்டல் அறிவியல் பூங்கா வந்துள் ளது. உலகம் முழுவதும் அறிவு சார் தொழில்களின் வளர்ச்சியில் பெரும் ஏற்றம் உள்ளது. கேரளாவின் எல்டிஎப் அரசாங்கம் கேரளாவின் முழுமை யான வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதில் உறுதியாக உள்ளது. இந்த பூங்காவின் மொத்த முதலீடு சுமார் 1,515 கோடி ரூபாய். ஏப்ரல் 25ஆம் தேதி அடிக்கல் நாட்டப் பட்டது. வெறும் 3 மாதங்களில் டிஜிட்டல் அறிவியல் பூங்கா அடிப் படை வசதிகளை செய்து முடித்து அதன் செயல்பாடுகளை துவக்கியது. உயர்கல்வியின் ஏற்றம் மற்றும் உள்கட்டமைப்பில் தீவிர மாற்றங்கள் கேரளாவின் வளர்ச்சியை வலுப் படுத்தும். இந்த டிஜிட்டல் அறிவியல் பூங்கா கேரளாவை அறிவுப் பொருளாதாரம் மற்றும் புதுமை சமூகமாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.