states

img

வயநாடு நிலச்சரிவு பகுதியில் கலசலிங்கம் பல்கலை. மாணவர்கள் குழு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கிருஷ்ணன்கோவில், ஆக.31 - கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் சமீபத்தில் நடந்த நிலச்சரிவில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவு வதற்கு, கலசலிங்கம் பல்கலை என்.எஸ்.எஸ், ஒய்.ஆர்.சி மாணவர்கள் நிவாரணப் பொருட்களை பல்கலைக்கழகத்தில் சேகரித்தனர். பின்பு, நிவா ரணப் பொருட்களை ஒரு  வேன் முழுவதும் 15 பண்டல் களில் ஏற்றிக்கொண்டு வய நாட்டிற்கு புறப்பட்டனர்.

பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீத ரன், இணைவேந்தர் டாக்டர்  அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர் முனை வர் எஸ். சசிஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவா ளர் முனைவர் வி.வாசுதே வன், மாணவர் நல இயக்கு நர் முனைவர் சாம்சன்நேச ராஜ் ஆகியோர் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வேனை கொடியசைத்து வைத்து மாணவர்களை வழி  அனுப்பினர்.

பேராசிரியர்கள் டி.ராஜ் பிரதேஷ், ப.தினேஷ்குமார், என்.எஸ்.எஸ், ஒய்.ஆர்.சி மாணவர்கள் அடங்கிய குழு  வயநாடு சென்று, இரண்டு  நாட்கள் அங்கு தங்கியிருந்து நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். 

மேலும், கேரள முதல மைச்சர் நிவாரண நிதிக்கு  ரூ.1,00,728 அனுப்பியுள்ள தாக பேராசிரியர்கள் தெரி வித்தனர்.