states

img

கேரளாவிற்கு பலத்த மழை எச்சரிக்கை

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டுப் பெய்து வரும் நிலையில், பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் மலப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் பலத்த மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம் மாவட்டங்கள் மஞ்சள் எச்சரிக்கையுடன் கடந்த 2 நாட்களாக மழையை எதிர்கொண்ட நிலையில், தற்போது ஆரஞ்சு எச்சரிக்கையால் அங்கு கனமழைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநிலத்தின் ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.