states

img

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பள்ளி கேரளாவில் தொடக்கம்!

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மக்களிடையே பரவலாகி வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேச உதவியுள்ளது ஏஐ தொழிட்நுட்பம். இருப்பினும் இத்தொழிட்நுட்பத்தில் இருக்கக்கூடிய சிக்கலும் புறந்தள்ளக்கூடிய அல்ல.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஏஐ பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற தொழில்நுட்பமும், மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளது. மாணவர்கள் கல்வி கற்கும் முறையை மேம்படுத்தப்பட்ட வகையில் மாற்றும் நோக்கில் இதனை முன்னெடுத்துள்ளது.சாந்திகிரி வித்யாபவன் எனும் பள்ளி.இதன் மூலம் மாணவர்கள் தனித்துவ கற்றல் முறையை பெற முடியும் என அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.