states

img

கேரளாவில் 135 சதவீதம் கூடுதலாக மழை - வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கேரளாவில் உள்ள கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து நாசமாகின.

தொடர்ந்து இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்து உள்ளது.   இந்த நிலையில் கேரளாவில் நடப்பு மாதம் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1 முதல்  19 ஆம் தேதி வரையில் இயல்பான மழை அளவு 192.7 மி.மீட்டராக இருக்கும் எனவும் ஆனால் நடப்பு ஆண்டு  435.5 மி.மீட்டர் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

;