world

img

நேபாளம் – கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு  

நேபாளத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.  

நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளன. 26 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  

இதனை தொடர்ந்து காணாமல் போனவர்களை மீட்பதற்காக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நிலச்சரிவில் இதுவரை 22 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;