states

img

இந்தியாவின் முதல் சூப்பர் கெப்பாசிட்டர் ஆலை கண்ணூரில் செயல்படத் தொடங்கியது

இந்தியாவின் முதல் சூப்பர் கெப்பா சிட்டர் உற்பத்தி நிலையம் கண் ணூரில் செயல்படத் தொடங்கி யது. கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார். மாநில தொழில் துறையின் கீழ் உள்ள கல்யாச்சேரி கெல்ட் ரான் உபகரண வளா கத்தில் உள்ள இந்த புதிய ஆலை உலகத் தரம் வாய்ந்த சூப்பர் மின்தேக்கிகளை (கெப்பாசிட்டர்) உள்நாட்டிலேயே தயா ரித்து, மின்சார வாகனங்கள் மற்றும் விண்வெளிப் பயணங்கள், இந்திய பாது காப்புத் துறைக்கு உட்பட கெல்ட்ரான் வழங்கும். சூப்பர் கெப்பாசிட்டர்கள் மின் சார வாகனங்கள், வாகன இயந்திரங் கள், இன்வெர்ட்டர்கள், ஆற்றல் மீட்டர் கள் போன்ற பல சாதனங்களில் பயன் படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு ஆகும். நாட்டின் பாதுகாப்புத் துறையில் நீண்ட  காலமாக பணியாற்றி வரும் கெல்ட்ரான் நிறுவனத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் சிஎம்இடி ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இஸ்ரோவின் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.