states

img

கேரளத்தில் கொளுத்தும் வெயில்

மித வெப்பநிலை மண்டலமான கேர ளத்தில் கோடைக்காலம் துவங்  கும் முன்னரே வெயில் கொளுத்தி  வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான  இடங்களில் 35 டிகிரி செல்ஸியஸை நெருங்கும் அளவிற்கு வெயில் சுட்டெ ரித்து வரும் நிலையில், கடந்த 2 நாட்க ளாக கண்ணூர், கோட்டயம், கோழிக்  கோடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்க ளில் இயல்பை விட அதிகபட்ச வெப்ப நிலை பதிவானது. 

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு மாநில பேரிடர்  மேலாண்மை ஆணையம் பொதுமக்க ளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதாரத்துறை எச்சரிக்கை
அதீத வெப்பநிலை குறித்து கேரள  சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்,”அதிக வெப்பநிலை  உணரப்படுவதால், பிற நோய்கள் ஏற்பட  வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் தண் ணீர் உள்ளிட திரவ உணவுகளை அதிக மாக உட்கொள்ள வேண்டும். மதிய நேரங்களில் வெளியில் செல்வதை  தவிர்க்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.