திருவனந்தபுரம், ஜன.14- மக்கள் சார்ந்த வளர்ச்சியை முன்வைத்துள்ள கொள்கை ஆவ ணத்திற்கு இடது ஜனநாயக முன்னணி யின் தலைமைக் கூட்டத்தில் ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்கு பார்வையை தெளிவுபடுத்தும் கொள்கை ஆவணத்தை அரசு செயல்படுத்தும் என்றும் முன்னணி யின் ஒருங்கிணைப்பாளர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்தார். கேரளத்தின் விரிவான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தயாரித்த கொள்கை ஆவணமாகும் இது. ‘கேரள வளர்ச்சிக்கான தொலைநோக்கு’ என்ற கொள்கை ஆவணத்தின்படி அரசு செயல்படும். குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் ஆவணத்தில் இடம் பெற் றுள்ளது என்றார். கேரளத்தை பொரு ளாதார ரீதியாக அழிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. உள்கட்டமைப் பை விரிவுபடுத்த கடன்கள் அவசியம். அது சுமையாகிவிடக்கூடாது என்பதே இடது ஜனநாயக முன்னணி அரசின் நிலைப்பாடு என தெளிவுபடுத்தினார். உயர்கல்வித்துறை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும். உயர் கல்வியில் தனியார் முதலீடு செய்யலாம் இது கொள்கை மாற்றம் அல்ல, காலத்திற்கேற்ற மாற்றம் என்று இ.பி. ஜெயராஜன் கூறினார். நீர்வள ஆணையம் ரூ.2,391 கோடி நஷ்டத்தில் உள்ளது. எனவே தண்ணீர் கட்டணத்தை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்தும் முடிவுக்கு எல்.டி.எஃப் ஒப்புதல் அளித்தது. பிபிஎல் பிரிவினருக்கு இந்த உயர்வு பொருந்தாது என்றும் செய்தியாளர் சந்திப்பில் இ.பி. ஜெயராஜன் தெரிவித்தார்.