states

img

கல்வியும் மருத்துவமும் தந்த அரசின் பொது சேவைக்கு உதவுகிறேன்: ரசூல் பூக்குட்டி

திருவனந்தபுரம், ஜுன் 19- கல்வி கற்கவும், உயிருக்கு ஆபத்தான நோய்களிலும் தனக்கு அரசு அமைப்பு உறு துணையாக இருந்தது. எனவே, அரசு துறைக்கு செலவு செய்ய விரும்புகிறேன் என்றார், ஆஸ்கார் விருதுபெற்ற பிரபல திரைக் கலைஞர் ரசூல் பூக்குட்டி. அதன்படி தனது சொந்த ஊரான அஞ்சலில் உள்ள சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். உலக கேரள சபையின் மூன்றவாது அமர்வில் அவர் மேலும் பேசுகையில், நான்  படித்தது அரசுப்பள்ளிகளில், கல்லூரி படிப்பை அரசு உதவித்தொகையுடன் படித்த தும் சட்டம் படித்ததும் அரசுக்கல்லூரிகளில் பின்னர் பூனா திரைப்படக்கல்லூரியில். 2 வய திலும் 5 வயதிலும் கடும் நோய்களில் இருந்து என்னை மீட்டது அரசு மருத்துவமனைகள். எனக்கு ரத்தம் தந்தவர்கள் எனது அண்ணனுடன் படித்த இளைஞர்கள். எனது உடம்பில் ஓடுவது இந்த சமூகத்தின் ரத்தம். நான் ஒரு பொது நிறுவனத்தின் தயாரிப்பு. அத னால்தான் சுகாதார நிலையங்களை மேம் படுத்த நான் உதவி வருகிறேன் என்றார். கொல்லம் மாவட்டம் அஞ்சால் சுகாதார  வட்டத்தில் உள்ள 33 சுகாதார நிறுவனங் களை நவீனமயமாக்கும் முயற்சியை ரசூல் பூக்குட்டி கடந்த ஆண்டு துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.