states

img

கேரளா வளர்ச்சிப் பணிகளைப் பாராட்டி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

திருவனந்தபுரம், ஜன.23- 15ஆவது கேரள சட்டப் பேரவை யின் 8ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் ஆரிப் முகமது கானின் கொள்கை அறி விப்பு உரையுடன் தொடங்கியது. மாநி லத்தின் வளர்ச்சி சாதனைகளை தனது கொள்கை அறிவிப்பு உரையில் ஆளு நர் எடுத்துரைத்தார். வளர்ச்சிப் பணி களில் மக்களின் நல்ல பங்கேற்பு இருப்பதாகவும், பொருளாதாரத் துறை யில் அரசின் சாதனை பாராட்டுக்குரி யது என்றும் ஆளுநர் கூறினார். திங்களன்று (ஜன.23) காலை 9 மணிக்கு ஆளுநரை முதல்வர் பினராயி விஜயன், சட்டப்பேரவை தலைவர்  ஏ.எம்.ஷம்சீர், அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்ற னர். அதே நேரத்தில், எதிர்க்கட்சி யினர், பதாகைகளை ஏந்தி, சட்டப்பேர வையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்ப்புகளை சமாளித்து, கொள்கை அறிவிப்பு உரைக்கு சென்றார் ஆளுநர்.

கேரளா வறுமையில்லா மாநிலமாக மாறியுள்ளதாகவும், நெருக்கடி நிலை யிலும் கேரளா வளர்ச்சி அடைந்துள்ள தாகவும் ஆளுநர் கூறினார். மாநிலம் 17 சதவிகிதம் வளர்ச்சி  அடைந்துள்ளது. எண்ம (டிஜிட்டல்)  கேரளா உருவாகிறது. நிலையான  வளர்ச்சியில் கேரளா முன்னோடி யாக இருப்பதாகவும், சமூக அதிகார மளிப்பதில் கேரளா முன்மாதிரியாக இருப்பதாகவும் கூறினார். நிலையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது கேரளம். நலிந்த பிரிவினருக்கான வளர்ச்சிக் கொள்கை. நிதி ஆயோக் புள்ளிவிவரங்களின்படி, கேரளா முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பழங்குடியினருக்கு சிறப்பு தொகுப்பு செயல்படுத்தப்பட்டது. வீடற்ற வர்களுக்கு வீடுகள் வழங்குவதில் லைஃப் மிஷன் பயனளித்துள்ளது.

மீளுருவாக்கம் மூலம் மீனவர்களின் மறுவாழ்வு உறுதி செய்யப்பட்டது. முதியோர் பராமரிப்பில் நாட்டிலேயே கேரளம் முன்னணியில் உள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க சிறப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டது. வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் நாட்டிலேயே கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது.  ஆர்த்ரம் மிஷன் அடிப்படை மருத்துவ சிகிச்சை துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. 2023இல் தோட்டப் பிரிவினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் கொள்கைப் பிரகடன உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.