திருவனந்தபுரம், டிச. 4- தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு சேவைகளை மக்கள் சார்ந்ததாக மாற்றுவதே நோக்கம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஊழி யர்களின் அணுகுமுறையிலும் குறிப்பி டத்தக்க மாற்றம் தேவைப்படுகிறது என்றார். அரசாங்க சேவை என்பது பொது மக்களுக்கு சேவைகளை வழங்குவதற் கான ஒரு வழியாகும் என்றும் முதல்வர் கூறினார். கேரள அரசின் மின் ஆளுமை விருது களை வழங்கிய முதல்வர் மேலும் பேசு கையில், காலாவதியான விதிமுறைகள் மக்க ளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவ தற்கு தடையாக உள்ளன. கேரளாவில் அதைப்போக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மக்களுக்கு இடையூறாக இருக்கும் விதிகள் கண்டறியப்பட்டால், அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தற்போது, ஆன்லைன் போர்ட்டலில் அரசாங்கத் தின் 868 சேவைகள் கிடைக்கப்பெற்றுள் ளன. 668 சேவைகளை வழங்கும் எம் சேவை மொபைல் செயலியும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் அதிக சேவைகள் உட்படுத்தப்படும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இ-சேவை கிடைக்க வேண்டுமானால் இணைய இணைப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்குத்தான் கே போன் திட்டம். தற்போது 2013 பொது இடங்க ளில் வைபி வசதிகள் உள்ளன. மேலும் 2000 இடங்களில் நிறுவும் பணி தொ டங்கப்பட்டுள்ளது. நிலப் பதிவேடுகளை சரியான நேரத்தில் வழங்க டிஜிட்டல் இருப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறினார். பொதுக் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தலைமை வகித்தார். நடுவர் மன்ற உறுப்பினர் டாக்டர். செபாஸ்டியன் பால், மேயர் ஆர்யா ராஜேந்திரன், ஐ.எம்.ஜி இயக்குநர் கே.ஜெயக்குமார், ஐ.டி செய லாளர் டாக்டர். ரத்தன் கேல்கர், ஐ.டி.மிஷன் இயக்குநர் சினேல்குமார் சிங் ஆகியோர் பேசினர்.