திருவனந்தபுரம், பிப்.18- கேரளத்தின் 64,006 மிகவும் ஏழ் மையான குடும்பங்கள் தத்தெடுக் கப்பட்டு முற்றிலும் அரசு செலவில் பாதுகாக்கப்படுவார்கள். நலன் மற் றும் பாதுகாப்பு திட்டங்கள் முற்றி லும் இலவசம். பரவலாக்கப்பட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழு விடம் இதற்கான பொறுப்பு ஒப்ப டைக்கப்பட்டு உள்ளது. இவர்களுக் கான உணவு, மருந்து, தங்குமிடம் மற்றும் உரிமைகள் உறுதி செய் யப்படும். வாழ்வாதாரம் இல்லாத வர்கள் காப்பகங்களுக்கு மாற்றப் பட்டு பாதுகாக்கப்படுவார்கள் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரிவித்துள்ளார். பரவலாக்கப்பட்ட திட்ட ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்திற்கு தலைமை வகித்த அமைச்சர் எம்.பி.ராஜேஷ் மேலும் கூறியதாவது: ஆதார் மற்றும் ரேசன் கார்டு போன்ற அடிப்படை ஆவணங்கள் முதலில் தயாரிக்கப்படும். வேலை செய்யக் கூடியவர்களுக்கு ஏற்ற அமைப்பு உருவாக்கப்படும். மாடு- ஆடு வளர்ப்பு, பெட்டிக்கடை போன்றவற்றை வழங்குவதோடு, மேற்கொண்டு தேவையான நட வடிக்கைகளுக்கு உதவியும் வழங் கப்படும். சுத்தமான தங்குமிடமும் உறுதி செய்யப்படும். 43,850 மிக வும் ஏழைகள், ஒற்றை உறுப்பினர் குடும்பங்கள், இருவர் உள்ள குடும்பங்கள் - 9,841, தலா மூன்று பேர் உள்ள குடும்பங்கள்-5,165. இவற்றில் 3021 பழங்குடியினர் குடும்பங்களும், 12,763 பட்டியல் சாதிக் குடும்பங்களும் உள்ளன. 2737 கடலோரக் குடும்பங்களும் மிக வும் ஏழ்மையானவை. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நுண் திட்டம் தயாரித்து, ஏழை-எளிய மக்க ளின் பாதுகாப்புக்காக திட்டங் களை செயல்படுத்த வேண்டும். இதற் காக உடனடி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
வீட்டு வசதி
வெள்ளத்தால் இடிந்து, அரசு உதவியுடன் மீட்கப்பட்ட வீடுகள் வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ள வர்களுக்கு லைஃப் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது, பகுதியளவு சேதமடைந்த வீடுகள் முதலமைச்ச ரின் நிவாரண நிதியில் இருந்து மீட்ட மைக்கப்பட்டன. இவற்றில் பல தற்போது வாழத் தகுதியற்றவை. முன்னதாக உதவித்தொகை பெறு வது தகுதி நீக்கம் அல்ல என முதல் வர் பினராயி விஜயன் சட்டப்பேர வையில் அறிவித்தார். உள்ளாட்சி அமைப்புகள் வாடகைக்கு எடுக்கும் கட்டடங்களின் வாடகையை, அந் தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறியியல் துறையே நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இதை, பொதுப்பணித்துறை மேற் கொண்டு வந்தது.