திருவனந்தபுரம், ஜன.11 - கேரள சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட நிலப்பதிவு திருத்த சட்டத்துக்கு ஆளுநர் ஆரீப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டுள்ளார். இதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி இடது ஜன நாயக முன்னணி சார்பில் பேரணி நடைபெற்றது.
கேரள சட்டமன்றத்தில் 2023 செப்டம்பர் மாதம் இடுக்கி மாவட்டத் தின் 65 ஆண்டுகால நிலப் பிரச்சனை க்கு தீர்வு காணும் வகையில் நிலப்பதிவு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆரீப் முகமது கான் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அதைக் கண்டித்து இடுக்கி மாவட்டம் முழு வதும் முழு அடைப்பு போராட்டமும், திருவனந்தபுரத்தில் ஆளுநர் மாளிகை முன்பு பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்த வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.
ஆனால், ஆளுநர் இடுக்கியில் வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட அளவிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். இதைக் கண்டித்தும் ஆளுநர் மாளிகை நோக்கிய பேரணிக்கு ஆதரவு தெரி வித்தும், செவ்வாயன்று (ஜன.9) இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் துவக்கி வைத்தார்.
இ.ஜ.முன்னணி அமைப்பாளர் கே.கே.சிவராமன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆனாவூர் நாகப்பன், ஜெயச்சந்திரன், மூத்த தோழர் எம்.எம்.மணி, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஜயகுமார் மற்றும் இடது ஜனநாயக முன்னணி நிர்வாகி கள் பங்கேற்றனர். ஆளுநருக்கு கருப்புக்கொடி இடுக்கியில் வணிகர்கள் மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வந்த ஆளுநருக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் 5 இடங் களில் கருப்புக்கொடி காட்டினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.
ஆத்திரமூட்டல் முயற்சியில் ஈடுபடும் கேரள ஆளுநர்
ஆளுநர் ஆரிப் முகமதுகானின் நடவடிக்கை ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார். நிலப்பதிவு திருத்த மசோதாவில் கையெழுத்திடாத ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.ஜ.முன்னணி இடுக்கி மாவட்டக் குழு நடத்திய ராஜ்பவன் அணிவகுப்பை துவக்கி வைத்து அவர் மேலும் பேசுகையில், “விவசாயிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தபோது அவர் இடுக்கி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
நில சட்ட திருத்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடுவது நல்லது. ஆளுநரின் முடிவு விவசாயிகளை பாதிக்கும் பட்சத்தில், கேரளம் முழுவதும் பலத்த விவசாயிகள் எதிர்ப்பை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கு ஆளுநரை ஒரு கருவியாக மாற்றுகிறது பாஜக. நிலச் சட்டத் திருத்த மசோதா விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்.
போதிய காரணமின்றி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்தி வைப்பது பாஜகவின் அரசியல் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆளுநர் அவரது கடமையில் இருந்து விலகி சிறிது காலம் ஆகிவிட்டது, எதையும் சொல்ல உரிமம் இருப்பதாக அவர் நினைக்கிறார். கேரள வரலாறு காணாத மக்கள் எதிர்ப்பு தற்போது ஆளுநருக்கு எதிராக ஏற்பட்டுள்ளது” என்று எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார்.