கோட்டயம், மார்ச் 9- முக்கியமான வழக்குகளில் ஒன்றிய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பல நீதிபதிகள் உடனடி யாக புதிய பதவி நியமனம் பெற்றுள் ளனர். இது நீதித்துறையின் பாகு பாடற்ற தன்மையைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தி தலை குனிவை ஏற்படுத்துகிறது என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.
கேரளம் மாநிலம் கோட்ட யத்தில் தர்ஷன் சன்ஸ்காரி கேந்திரா ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவில், “இந்தியக் குடி யரசு மீட்பு” என்ற தலைப்பில் அவர் பேசுகையில் மேலும் கூறிய தாவது:
சுயமாக செயல்படும் நீதிபதி களை நியமிக்காமல் ஒன்றிய அரசு தலையிடுகிறது. முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. நீதிபதிகள் புலனாய்வு அமைப்பு களால் கண்காணிக்கப்பட்டு, மிரட் டப்பட்டு, அரசுக்கு ஏற்றவாறு தீர்ப்பு களை உருவாக்குகின்றனர். நீதித் துறை ஊழலில் இருந்து முற்றி லும் விடுபட்டது என்று கூற முடி யாது.
வாக்கு எந்திர முறைகேடு ஜனநாயகத்தை புதைப்பது
உச்சநீதிமன்றத்தில் இருந்தும், முக்கியமான பிரச்சனைகளில் நடு நிலையான தீர்ப்புகள் வருகின்றன. இத்தகைய தீர்ப்புகளில் மேலும் செல்வாக்கு செலுத்த இந்த நிய மனங்கள் ஒரு ‘கருவியாக’ மாறக் கூடும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பது ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாகும். ஊட கங்களில் விளம்பரம் செய்து, பணம் மற்றும் செல்வாக்குடன் தேர்தல் முடிவுகள் வாங்கப்படு கின்றன. ஊடகங்கள் மோடி ஊடகமாக மாறி வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வுக்கு டாக்டர்.ஜேக்கப் வடக்குச்சேரி தலைமை வகித்தார். தர்ஷன் கலாச்சார மைய இயக்குநர் சகோ. எமில் புலிகாட்டில், பேராசிரியர். எம்.பி. மாத்தாய், பி.ஐ மணி ஆகியோர் பேசினர்.