states

img

‘ஏகபோக முதலாளித்துவத்துடன் கைகோர்த்து நிலைநிறுத்திக்கொள்ளும் பாசிசம்’

ஏகபோக முதலாளித்துவத்துடன் கைகோர்த்தும், சமரசம் செய்து கொண்டுமே எல்லா காலத்திலும் பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

அணிதிரட்டப்பட்ட தொழிலாளர் சமூகம், தேசிய அளவில் சம்பளம் போன்றவற்றிற்காக நடத்தும் போரா ட்டங்களை ஒடுக்க முதலாளித்துவ சக்திகளால் சாத்தியமாவது உலக ளாவிய அவர்களது அமைப்பு பலத்தால் தான்.

உலகில் எங்கும் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதை சாத்தியமாக்கிய முதலாளித்துவ சக்திகள், தொழிலாளர்களின் அமை ப்பு வலுப்படாமல் தடுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளன. சந்தையை சுதந்திரமாக்கிய நாடுகள் அனைத்தும் உலக பொருளாதார சக்திகளுக்கு கட்டுப்பட்டு நடக்க கட்டாயப்படுத்தப்படுகின்றன.

பாசிசம் நெருக்கடியை சந்திக்கும் போதெல்லாம் உண்மை நிலையுடன் எந்த தொடர்பும் இல்லாத விசயங் களை தேசிய அளவில் விவாத மாக்கவே ஆளும் வர்க்கம் எல்லா காலங்களிலும் முயன்றுள்ளது. ஏராளமான நெருக்கடிகளின் ஊடாக இந்திய சமூகம் கடந்து செல்லும்போ து இங்கே ராமர் கோயில் தொடர்பான விவாதம் முன்வைக்கப்படுவது இந்த தந்திரத்தின் ஒரு பகுதியே! 

திருச்சூரில் நடைபெற்ற கேரள சாகித்ய அகாடமியின் சர்வதேச இலக்கிய விழாவில் “ஜனநாயகம் எப்படி அழிகிறது – புதிய தாராளவாதமும் பாசிசமும்” என்ற தலைப்பில் பொருளாதார அறிஞர் பேரா.பிரபாத் பட்நாயக் ஆற்றிய உரையில் இருந்து-