கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையும் விதித்து கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் கொச்சி மாவட்டம் ஆலுவா பகுதியில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் தம்பதி கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அவர்களின் 5 வயது மகள் காணாமல் போனாதாக காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பீகாரைச் சேர்ந்த அசாஃபக் அலாம் என்பவர் சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியின் வாக்குமூலத்தை பெற்ற போலீசார், பின்னர் குப்பைக்கிடங்கு ஒன்றிலிருந்து சிறுமியின் உடலை மீட்டனர். இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம், குற்றவாளி அஸ்ஃபக் ஆலத்திற்கு தூக்குத் தண்டனையுடன் 5 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.