states

img

கேரள இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளராக இ.பி.ஜெயராஜன் நியமனம்

திருவனந்தபுரம், ஏப்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜனை  இடது ஜனநாயக  முன்னணி (எல்.டி.எப்.,) அமைப்பாளராக நியமிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள  மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.  முதல்வரின்  அரசியல் செயலாளராக பி.சசி நியமிக்கப் பட்டுள்ளார். இவர் இ.கே.நாயனார் முதலமைச்ச ராக இருந்தபோது அவருக்கு அரசியல் செய லாளராகவும் இருந்துள்ளார். சிபிஎம் கேரள மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் செவ்வா யன்று செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை அறிவித்தார். அவர் கூறுகையில், கண்ணூரில் நடைபெற்ற கட்சி அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக் குழுவுக்கு ஏ.விஜயராகவன் தேர்ந்தெடுக்கப்பட்ட தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. புது தில்லியில் கவனம் செலுத்த ஏ.விஜயராகவன் கட்சி யால் பணிக்கப்பட்டுள்ளார்.  

முதல்வர் பினராயி அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த இ.பி.ஜெயராஜன், வாலிபர் சங்க அகில இந்திய தலைவர், விவசாயி சங்க மாநில தலைவர், தேசாபி மானி பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் புத்தளத்து தினேசன்  தேசாபி மானியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டுள்ளார். ஆசிரியராக இருந்த பி.ராஜீவ் அமைச்ச ரான பிறகு கோடியேறி பாலகிருஷ்ணன் அந்த பொறுப்பேற்றார். மத்திய குழு உறுப்பினர் டாக்டர்.  டி.எம்.தாமஸ் ஐசக், சிந்தா வார இதழின் ஆசிரிய ராக செயல்படுவார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சுவராஜ், சிந்தா பதிப்பகத்தின் பொறுப்பாள ராக செயல்படுவார். அரசியல் தலைமைக்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்ட மூத்த தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, ஏகேஜி சென்டரில் பணி யாற்றுவார். ஏகேஜி கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், இஎம்எஸ் அகாடமி ஆகியவற்றின் பொறுப்பாளராக இருப்பார் என்று மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.