திருவனந்தபுரம், ஜுன் 21- மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்ச கத்திடம் இருந்து இடுக்கி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு முதல் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதாக கேரள மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேவை அதிகரிக்கும்போது கூடுதலாக 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் இடுக்கியின் உற்பத்தித் திறன் 25,900 லட்சம் யூனிட்டாக உயரும். 2700 கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. நான்கு 200 மெகாவாட் திறன்கொண்ட 2 ஜெனரேட்டர்கள் நிறு வப்படும். சுரங்கப்பாதைகள் மற்றும் மின் உற்பத்தி நிலை யங்கள் உள்ளிட்ட நிலத்தடி கட்டுமானப் பணிகள் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். இடுக்கி நீர்த்தேக்கம் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 780 மெகாவாட் திறன் கொண்ட இடுக்கி திட்டம் தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வரு கிறது. ஒரு வருட காலம் நீடித்த ஆய்வுக்குப் பிறகு இரண்டாம் கட்ட சுற்றுச் சூழல் அனுமதி கிடைத்துள் ்ளது. இதைத் தொடர்ந்து டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கும். கட்டுமானப் பணிகள் 2023 இல் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் முடிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்திட்டம் முடி வடைந்தால், இடுக்கி இந்தி யாவின் மூன்றாவது பெரிய நீர்மின் திட்டமாக மாறும்.