states

img

கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு ரூ.70,113 கோடிக்கான திட்டங்கள் தயார்

திருவனந்தபுரம், ஆக.29-

      கேரள அரசின் தலையீட்டால், தேசிய நெடுஞ்சாலை 66 மேம்பாடு சாத்தியமாகி வரும் நிலையில், ரூ.70,113.62 கோடி மதிப்பிலான புதிய  திட்டங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.

     கிரீன்ஃபீல்ட் (பசுமை) சாலைகள் உட்பட மொத்தம் 960 கி.மீ.க்கு 27  சாலைகள் மாநில அரசின் ஒத்துழைப்பு டன் அமைக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் ரூ.66,627.11 கோடி  (838.89 கிமீ) மதிப்பில் 15 சாலை களும், பாரத்மாலா திட்டத்தின் கீழ்  ரூ.3486.51 கோடி (121.38 கிமீ) மதிப்பில் 12 சாலைகளும் அமைக்கப்படும். இவற்றுக்கான விரிவான திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

     விழிஞ்ஞம்-நாவாய்குளம் வெளிவட்ட சாலை, திருவனந்தபுரம்-அங்கமாலி கிரீன்ஃபீல்ட், கொச்சி- மூணாறு-தேனி நான்கு வழிச்சா லை, அங்கமாலி-குண்டனூர் பைபாஸ், கொல்லம்-செங்கோட்டை கிரீன்ஃபீல்ட் போன்றவை வரவிருக் கும் முக்கிய திட்டங்களாகும். வேறு எங்கும் இல்லாத வகையில் நிலம் கையகப்படுத்தும் செலவில் 25 சதவிகிதத்தை அரசே ஏற்றதால் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு சாத்திய மானது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், இனி எந்த திட்டத்திற்கும் மாநில அரசு பணம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், கட்டுமானப் பொருட் களுக்கான ஜிஎஸ்டியை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அரசுக்கு சொந்தமான குவாரி களையும் விட்டுத் தர வேண்டும் என்றார்.

     இதனால், அரசுக்கு பல கோடி  ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், சுங்கச்சாவடிகள் உட்பட  தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  பெறும் வருவாயை, மாநிலங்களுடன் ஒன்றிய அரசு பகிர்ந்து கொள்வ தில்லை.